விஜய் டி.வியில் தொடர்ந்து பார்த்து ரசிப்பதுபோல் இருக்கும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர் 2008 நிகழ்ச்சி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் மனோ மற்றும் சித்ரா அவர்கள் கலந்துகொண்ட வாரம் மிகவும் சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. அதில் குறிப்பாக மனோ.. அசத்தி விட்டார் அவர் செய்த ஆக்டிங், மிமிக்ரி மற்றும் பாடும்பொழுது அவர் செய்த அனாசயங்கள் மேலும் நிகழ்ச்சியை மெருகூட்டியது.
மனோ மேடையில் வந்ததுமே அவர் என்.டி.ராமராவ் போல் செய்ததும் ‘ஆயிரத்தில் நான் ஒருவன்’ எனத் தொடங்கும் ‘இருவர்’ படப் பாடலைப் பாடும்பொழுது அவர் செய்த ஆக்டிங்கும், அட மனோ தானா என வியக்கும்படியாக இருந்தது. சின்மயி ‘நேத்து ஒருத்தர ஒருத்தரு பார்த்தோம்’ பாடலை சோகமாகப் பாடச் சொல்லிக் கேட்க மனோ அந்தப் பாடலை சோகமாகப் பாடி கலக்கியது ரசிக்கும்படியாக இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து மனோ மற்றும் ‘சின்ன குயில்’ சித்ரா அவர்கள் மேடை நிகழ்ச்சியில் பாடுவதை பார்க்கும் வாய்ப்பு அனைவருக்கும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் கிடைத்ததில் விஜய் டி.விக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.