இன்றைய கிழக்கின்
இளைய பாரதத்தில்
எத்தனை அவலங்கள்
எத்தனை கொடுமைகள்
பஞ்சம் ஒரு பக்கம்
பசி ஒரு பக்கம்
தஞ்சம் புகுந்திட
தரணியில் இடமில்லை
சாராய சாம்ராஜ்யம்
சண்டாளர் கேளிக்கை
பாராளும் மன்னர்கள்
பதவிக்கு குடுமிப்பிடி
சடுகுடு விளையாடிய
சகோதர பூமியில்
வெடிகுண்டு கலாச்சாரம்
வீதியெங்கும் பிணக்குவியல்
கலாச்சாரம் பண்பாடு
போனதெங்கே எனத்தேடு
சாதி மதக் கலவரங்கள்
படுத்துதிங்கே பெரும்பாடு
எனவே,
சாதி மத பேதமில்லா
நமதருமை பண்பாட்டோடு
இளைஞர் சமுதாயம் எழுச்சி பொங்க
புதிய பாரதம் படைத்திட
சத்தியம் நமது புத்தகமாகட்டும்
சமத்துவம் நமது தத்துவமாகட்டும்
நாளைய கிழக்காவது
நலமாய் விடியட்டும்.
– மீனா மாதவன், ஈரோடு